×

குறைந்த விலையால் வேதனை பூண்டு மூட்டைக்கு தீ வைத்த விவசாயி

மந்த்சூர்:  மத்தியப் பிரதேசத்தில் தான் விளைவித்த பூண்டு மிக குறைந்த விலைக்கு விற்பனையானதால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, 150 கிலோ பூண்டை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் உள்ள மகித்பூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சங்கர் சிங். இவர் தனது நிலத்தில் பூண்டு பயிரிட்டார். அறுவடை செய்யப்பட்ட அந்த பூண்டுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு சென்றார். மந்த்சூர் கிரிஷி உபாஜ் மண்டியில் நேற்று முன்தினம் இவற்றை ஏலம் விட்டார். இதில், தரத்தை பொறுத்து ஒரு குவிண்டால் பூண்டு ரூ.1400க்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. அன்றைய தினம்  8 ஆயிரம் மூட்டை பூண்டு விற்பனைக்கு வந்ததால் நேரமாக நேரமாக விலை மேலும் குறைந்தது. தரத்தை பொறுத்து குவிண்டால் ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்டது. தனது பூண்டுக்கு மிகவும் குறைந்த விலை கிடைத்ததால் சங்கர் சிங் விரக்தி அடைந்தார். உழைத்த கூலி கூட கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில், 150 கிலோ பூண்டு மூட்டைக்கு அவரே தீ வைத்து எரித்தார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது….

The post குறைந்த விலையால் வேதனை பூண்டு மூட்டைக்கு தீ வைத்த விவசாயி appeared first on Dinakaran.

Tags : Mansur ,Madhya Pradesh ,
× RELATED மத்தியப்பிரதேசத்தில் உயர்ஜாதி...